×

யானை நடமாட்டத்தால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பு

திண்டுக்கல்: யானை நடமாட்டத்தால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரிஜம் ஏரியை ஒட்டிய பகுதியில் குட்டியுடன் யானை நடமாடுவதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியசுற்றுலாத்தலமாக பேரிஜம் ஏரி அமைத்துள்ளது. இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையின் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

கடந்த சில மாதங்களாக யானைகள் இந்த பகுதியில் முகாமிட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் பேரிஜம் பகுதிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். முகாமிட்டிருந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்கு வனத்துறையினர் விரட்டியடித்தனர்.இதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 18ம் தேதி பேரிஜம் வனப்பகுதிக்கு சென்று வந்த சுற்றுலா பயணிகள், யானைகள் கூட்டத்தை படம்பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரிஜம் ஏரியை ஒட்டிய பகுதியில் குட்டியுடன் யானை நடமாடுவதால் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post யானை நடமாட்டத்தால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு தற்காலிக தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal Parijam lake ,Dindigul ,Parijam lake ,Barijam Lake ,Kodaikanal ,Forest Department ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...